மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரைப் போற்றி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி வேற்றுமை ஒழிப்பு உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளை தனது எழுத்துக்களின் மூலம் விதைத்தவர் பாரதியார் என்றும், தனது கவிதைகளை சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக மாற்றியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கிய மகாகவி பாரதியாரின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகம் அளிப்பவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் புகழைப் போற்றி வணங்குவதாகவும் தனது பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.