தூத்துக்குடியில் மகாகவி பாரதியாரின் 105-வது நினைவு தினம் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதியார் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.