அம்மனுவில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட தெய் வச்செயல்புரமானது நெல்லை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை யில் வளர்ந்து வரும் நகர் பகுதியாக அமைந்துள்ளது.
இதனை சுற்றி ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன.
இப்பகுதி மக்கள் தங்களின் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தெய்வச்செயல்புரம் வந்து அங்கிருந்து நெல்லை, துாத்துக்குடி போன்ற பிறபகுதிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
போக்குவரத்து நிறைந்த தெய்வச்செயல்புரத்தில் காவல் நிலையம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.இதனால்,
கொலை,கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்து, மறியல் போன்ற நிகழ்வுகளின் போது சுமார் 12 கிலோ மீட்டர் துாரத்திற்கு அப்பால் இருந்து போலீசார் வருவதற்கு மிகவும் தாமதமாகி விடுகிறது.
எனவே, இது போன்ற குற்ற நிகழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில் தெய்வச் செயல்புரத்தில் புதியதாக காவல் நிலையம் அமைக்கவேண்டும்.
மாலை முதல் இரவு வரையிலும் போலீசார் தெய்வச்செயல்புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுத்து பாதுகாத்திட வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்