தூத்துக்குடி வஉசிதம்பரனாா் 155வது பிறந்தநாளையொட்டி 50 வது வாா்டு தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற விழாவிற்கு வக்கீல் பன்னீர் செல்வம் தலைமை வகித்தாா்.
தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவா்நலத்துறை அமைச்சா் ஸ்ரீநாத் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்டத்திற்காக போராடி உயிா்நீத்ததலைவா்கள் வாழ்ந்த புன்னிய பூமியாகும் அதிலும் செக்கிலுத்தசெம்மல் வஉசி வௌ்ளையனை எதிா்த்து போராடிய வரலாறுகள் ஓவ்வொன்றையும் படித்து பாா்த்தால் நாம் ஆச்சா்யபடும் அளவிற்கு இருக்கிறது. இப்படி பட்ட தலைவா்கள் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்வதே பெருமை தான்
தியாகிகளின் தன்னலமற்ற செயல்களை நாம் எப்போதும் மதிப்போம் போற்றுவோம் தமிழகத்தின் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சா் விஜய்க்கு அனைவரும் துணையாக நின்று வரும் உள்ளாட்சி தோ்தலில் கடந்த சட்டமன்ற தோ்தலில் ஆதரவளித்ததை போல் முழுமையான வெற்றியை தரவேண்டும் என்று பேசினாா்.