மேலும், அதிகாலை 4 மணி முதலே சேவையைத் தொடங்கும் பேருந்துகளை இயக்கும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான கிலோமீட்டர் பணியை முடித்த பிறகும், இரவு நேரத்தில் அதிகாரிகளின் உத்தரவின்படி மதுரை சென்று, அங்கிருந்து மீண்டும் திருச்செந்தூருக்கு இயக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை ஏற்க மறுக்கும் தொழிலாளர்கள் மீது அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கீழ்மட்டம் முதல் உயர் அதிகாரிகள் வரை இதற்கு ஒத்துழைப்பு இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் மனஅழுத்தத்துடனும், 24 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்ற வேண்டிய சூழலிலும் உள்ளதாகவும், இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் பணியாற்றி வருவதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.