Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

Admin 1 week ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) போலீசார் திடீர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

குறிப்பாக, பொறியியல் பிரிவு அலுவலகத்திற்குள் சென்று முக்கிய நுழைவாயிலை மூடி வைத்து ஆவணங்கள் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் தொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சோதனை நடைபெற்று கொண்டிருந்தபோது வெளிப்பணிகள் மற்றும் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வரி செலுத்தவும் மனுக்கள் அளிக்கவும் வந்த பொதுமக்களும் வெளியே நிறுத்தப்பட்டதால் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் தொடர்ந்து ஆவணங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து இவ்வாறு அதிரடி சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. சோதனை முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

5 days ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

1 week ago

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

1 week ago

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

1 week ago

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் கைபேசிக்கு முழுத் தடை! உயர்நீதிமன்ற உத்தரவு அமல்

1 week ago

தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement