Share On
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை முதல் கைபேசிக்கு முழுத் தடை! உயர்நீதிமன்ற உத்தரவு அமல்

Admin 1 week ago தூத்துக்குடி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளே கைப்பேசி கொண்டு செல்ல நாளை முதல் தடை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P.(MD) No.25439/2022 பொதுநல வழக்கில் வழங்கிய உத்தரவின்படி, 14.11.2022 முதல் நடைமுறையில் உள்ள கைபேசி பயன்பாட்டுத் தடை, 01.07.2026 முதல் மேலும் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.


இதன்படி, பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவாயில்களிலும் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் Mobile Deposit Counters அமைக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது கைபேசிகள் கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 01.07.2026 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வராத நடைமுறைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

5 days ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

1 week ago

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

1 week ago

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

1 week ago

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

1 week ago

தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement